Paristamil Navigation Paristamil advert login

ரகசிய நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்த சித்தார்த்!

ரகசிய நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்த சித்தார்த்!

7 சித்திரை 2024 ஞாயிறு 09:39 | பார்வைகள் : 1975


சினிமா உலகின் அடுத்த நட்சத்திர ஜோடி நடிகர்கள் அதிதி- சித்தார்த். நீண்ட நாட்களாகவே காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தவர்கள் காதல் குறித்து பொதுவெளியில் உறுதி செய்யாமல் இருந்தனர். ஆனால், கடந்த மாதம் மார்ச் 27ஆம் தேதி இவர்களது திருமணம் தெலங்கானா மாநிலத்தில் ரகசியமாக நெருங்கிய உறவினர்களுடன் நடந்ததாக செய்திகள் வெளியானது. இதற்கு மறுநாளே, இந்த ஜோடி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் நிச்சயதார்த்தம் முடித்து விட்டோம், திருமணம் இல்லை என பதிவிட்டனர்.


அதிதியுடனான காதல் குறித்து சித்தார்த்திடம் சமீபத்தில் நடந்து முடிந்த விருது விழா ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “’பாய்ஸ்’ படத்தில் எனக்கொரு கேர்ள் ஃபிரெண்ட் வேணுமடா’ன்னு பாட்டு பாடி 23 வருஷம் ஆச்சு. ஆனா, இப்போதான் அது சரியான நபருக்கு கேட்டு இருக்கு. சேர்த்து வச்சிட்டாங்க” என்றார்.

ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்தது குறித்தான கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஒரு விஷயத்தை பிரைவேட்டா செய்யறதுக்கும் ரகசியமா செய்யறதுக்கும் வித்தியாசம் இருக்கு. நான் ரகசியமா எதையும் செய்யல. எங்களுடைய நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பிரைவேட்டாக நடந்தது. அதேபோல, திருமண தேதி குறித்தும் நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். உடனே தேதி முடிவு பண்ண இது பட ரிலீஸ் கிடையாது. பெரியவர்கள் முடிவு செய்ததும் நிச்சயம் சொல்வோம்” என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்