Paristamil Navigation Paristamil advert login

யாழில் 3 பிள்ளைகளின் தாய் கழுத்து நெரித்து கொலை

யாழில் 3 பிள்ளைகளின் தாய் கழுத்து நெரித்து கொலை

11 வைகாசி 2024 சனி 16:47 | பார்வைகள் : 1371


யாழ்ப்பாணம் - தாளையடி பகுதியில் நேற்று பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ். மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பதிவானது. 

உயிரிழந்த பெண்ணின் கணவன் கடற்றொழிலுக்கு சென்று நேற்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார். 

அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். 

அப்பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்