Paristamil Navigation Paristamil advert login

Neuilly-sur-Seine : பாடசாலையில் இனவாத தாக்குதல்.. வழக்கு பதிவு!

Neuilly-sur-Seine : பாடசாலையில் இனவாத தாக்குதல்.. வழக்கு பதிவு!

30 வைகாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 3128


பாடசாலை மாணவன் ஒருவர் தொடர்ச்சியாக இனவாத துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், மாணவனது பெற்றோர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த மாணவன் ஒருவரே இனவாத துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். 'அழுக்கான அராப்' எனவும், 'ஹமாஸ் பயங்கரவாதி' எனவும் மாணவன் மீது துவேசம் கக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் ஐந்தாம் வகுப்பு பயில்வதாகவும், மேற்படி துன்புறுத்தலை அடுத்து, அவனின் பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகம் மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்