Paristamil Navigation Paristamil advert login

இந்தியா, பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண அரையிறுதிக்கு செல்லும்  வீரர்கள்

இந்தியா, பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண அரையிறுதிக்கு செல்லும்  வீரர்கள்

30 வைகாசி 2024 வியாழன் 08:02 | பார்வைகள் : 3196


டி20 உலகக்கிண்ண தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெறும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி 20 உலகக்கிண்ண தொடர் நடைபெற உள்ளது. 

இதில் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், 2 ஆம் திகதி நடைபெறும் போட்டிகளில் அமெரிக்கா-கனடா மற்றும் மேற்கிந்திய தீவுகள்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.

ஒவ்வொரு அணியும் இந்த தொடருக்காக தயாராகி வரும் நிலையில், எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும் என அவர் கூறியுள்ளார். 

போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு செல்லாது என அவர் மறைமுகமாக கூறியுள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்