Paristamil Navigation Paristamil advert login

கோலி, ரோஹித் சர்மாவுக்கு இதுவே இறுதி வாய்ப்பு...! முன்னாள் வீரர் எச்சரிக்கை

கோலி, ரோஹித் சர்மாவுக்கு இதுவே இறுதி வாய்ப்பு...! முன்னாள் வீரர் எச்சரிக்கை

30 வைகாசி 2024 வியாழன் 08:05 | பார்வைகள் : 952


டி20 உலகக்கோப்பை தான் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு என முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் சூன் 2 ஆம் திகதி தொடங்குகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் களம் காண உள்ளது. 

அதில் விராட் கோலியும் இருப்பதால், 2019யில் தவறவிட்ட உலகக் கிண்ணத்தை இந்திய அணி இம்முறை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் இந்த உலகக்கிண்ணம் தான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு எனது தெரிவித்துள்ளார். 

அவர் கூறுகையில், ''ரோஹித் சர்மாவுக்கு அவர் நீண்ட காலம் விளையாடப் போவதில்லை என்பது தெரியும். 

இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் தான். விராட் கோலியும் அதேபோல் தான். எனவே இருவருக்கும் இதுவே கடைசி வாய்ப்பு. அகமதாபாத்தில் நடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர்.

கிண்ணத்தை அவர்களிடம் இருந்து பறித்தது போல் விளையாடினர். இதயங்கள் உடைந்தன மற்றும் ரசிகர்கள் மனம் உடைந்தனர். 

இம்முறை லீக் சுற்றில் இந்தியாவிற்கு பெரிதளவில் போட்டியில்லை.

அரையிறுதி மற்றும் இறுதி ஆகிய 2 போட்டிகள் மட்டுமே இந்தியாவிற்கு கடினமாக இருக்கும். 

நீங்கள் அந்த 2 நாட்களுக்கு தயாராக இருக்கிறீர்களா? இதுவே ரோகித் சர்மாவுக்கு பாரிய சோதனை ஆகும்'' என தெரிவித்துள்ளார். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்