Paristamil Navigation Paristamil advert login

RER B : தொடருந்துக்குள் வைத்து கத்திக்குத்து தாக்குதல்! - ஒருவர் படுகாயம்!!

RER B : தொடருந்துக்குள் வைத்து கத்திக்குத்து தாக்குதல்! - ஒருவர் படுகாயம்!!

1 வைகாசி 2024 புதன் 06:01 | பார்வைகள் : 3240


RER B தொடருந்துக்குள் வைத்து ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 29 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் இச்சம்பவம் Le Bourget (Seine-Saint-Denis) நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. தொடருந்தில் பயணித்த 30 வயதுடைய ஒருவரை, ஆயுததாரி ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கைகளில், தொடையில், முதுகில் என குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

அதையடுத்து, அவர் உயிருக்காபத்தான. நிலையில் Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் மேற்கொண்டவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, குறித்த தொடருந்து நிலையத்துக்கு அருகே வைத்து கைது செய்யப்பட்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்