Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் பிரித்தானியாவை நோக்கி படையெடுத்த 15 படகுகள்..!

ஒரே நாளில் பிரித்தானியாவை நோக்கி படையெடுத்த 15 படகுகள்..!

19 ஆனி 2024 புதன் 16:07 | பார்வைகள் : 2822


நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒரே நாளில் 900 வரையான அகதிகள் பிரித்தானியாவை நோக்கி படகுகளில் படையெடுத்துள்ளனர். 

2022 ஆம் ஆண்டின் பின்னர் நாள் ஒன்றில் பிரித்தானியா நோக்கிய பயணித்த அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். ஜூன் 18 - 19 ஆம் திகதிக்கு உட்பட்ட இரவில் 882 அகதிகள் பிரித்தானியா நோக்கி சிறிய படகுகளில் பயணித்துள்ளனர். மொத்தமாக 15 படகுகளில் பிரான்சில் இருந்து அவர்கள் பிரித்தானியாவைச் சென்றடைந்ததாக பிரித்தானியாவின்  Home Office அறிவித்துள்ளது. இவர்களுடன் சேர்த்து இவ்வருடத்தில் மொத்தமாக 12,313 அகதிகள் பிரித்தானியாவைச் சென்றடைந்ததாகவும், சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18% சதவீதம் இது அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக 2022 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி 947 அகதிகள் ஒரே இரவில் ஆங்கிலக்கால்வாயை கடந்திருந்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்