Paristamil Navigation Paristamil advert login

நேற்று நடைபெற்று முடிந்த ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் France அணியின் நிலை என்ன?

நேற்று நடைபெற்று முடிந்த ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் France அணியின் நிலை என்ன?

22 ஆனி 2024 சனி 07:11 | பார்வைகள் : 7229


ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகள் இவ்வாண்டு (2024) ஜெர்மனியில் நடந்து வருகிறது இதில் பிரான்ஸ் அணி 'D' பிரிவில் விளையாடி வருகிறது. கடந்த திங்கட்கிழமை (17/06) தன் முதலாவது களத்தை Autriche அணியுடன் மோதி 1க்கு 0 எனும் கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கியது.

இந்த நிலையில் பிரான்ஸ் அணியின் தலைவர் (Capitaine) Kylian Mbappe கடந்த போட்டியின் போது காயமடைந்த நிலையில் இன்றைய (21/06) Pays-Bas அணியுடன் பிரான்ஸ் மோதும்  போது அவர் 'remplaçant' வீரராக அமர்ந்திருக்கும் நிலையில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல் சுற்றில் (45 நிமிடம் )
இரு அணிகளும் எந்த விதமான கோள்களும் ஈட்டாத நிலையில், இரண்டாவது பகுதி ஆரம்பம் ஆனது, இரண்டாவது பகுதியில் 68வது நிமிடத்தில் Pays-Bas அணி ஒரு கோளை இறக்கினாலும் அது செல்லாது என அறிவிக்கப்பட்டது. 

பல சந்தர்ப்பங்கள் வந்தபோதும் இரு அணிகளும் அதனை தவறவிட்ட நிலையில் இரு அணிகளும் 0-0 என்னும் நிலையில் உதைபந்தாட்டம் நிறைவு கண்டது. இதனால் இரு நாடுகளுமே 8e finale செல்லும் தகுதியை தற்காலிகமாக இழந்தன. 

அடுத்த சுற்று ஆட்டத்தில் France அணி Pologne நாட்டு அணியுடனும், Pays-Bas அணி Autriche நாட்டு அணியுடனும் மோத வேண்டும். இதில் France அணி Pays-Bas, Autriche அணியோடு மோதும் போது ஈட்டப்படும் கோள்களை விட அதிகமான கோள்களை ஈட்ட வேண்டும் இல்லையேல் 'D' பிரிவில் France அணி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும். 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்