Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

30 வைகாசி 2024 வியாழன் 15:38 | பார்வைகள் : 1002


பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடம் மக்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்புகளிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரேபிய கடல் பகுதிகளிலும், தெற்கிலும் பலத்த காற்றுடன் கொந்தளிப்பான கடல்களுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்