Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் தீபத்தினைக் காண ஒன்றுகூடும் 50,000 பேர்!

ஒலிம்பிக் தீபத்தினைக் காண ஒன்றுகூடும் 50,000 பேர்!

31 வைகாசி 2024 வெள்ளி 08:05 | பார்வைகள் : 1748


ஒலிம்பிக் தீபம் இன்று மே 31, வெள்ளிக்கிழமை Mont-Saint-Michel தீவுக்கு கொண்டுவரப்பட உள்ளது. தீபத்தினைக் காண 50,000 பேர் ஒன்றுகூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் முழுவதும் சுற்றிக்கொண்டுவரப்படுகிறமை அறிந்ததே. இன்று வெள்ளிக்கிழமை Cherbourg-en-Cotentin, Saint-Vaast-la-Hougue, Saint-Lô, Sainte-Mère-Église, Granville, Villedieu-les-Poêles-Rouffigny ஆகிய நகரங்களுக்கு கொண்டுசெல்லப்படும் எனவும் இறுதியாக Mont-Saint-Michel தீவுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.

அங்கு முன்னாள் ஒலிம்பிக் சம்பியனான 101 வயதுடைய Roger Lebranchu என்பவர், ஒலிம்பிக் தீபத்தினை சில நிமிடங்கள் கொண்டுசெல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mont-Saint-Michel தீவில் ஒலிம்பிக் தீபத்தினைக் காண 50,000 பேர் ஒன்றுகூடுவார்கள் எனவும், மொத்தமாக 600 காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்