Paristamil Navigation Paristamil advert login

யாழில் அதிகாலையில் பாரிய கொள்ளை: தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழில் அதிகாலையில் பாரிய கொள்ளை: தீவிர விசாரணையில் பொலிஸார்

1 ஆனி 2024 சனி 15:12 | பார்வைகள் : 1108


யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு தங்கம், பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை , வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கி ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டதுடன், வர்த்தகரின் மனைவியை தாக்கி அவரது நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் அப்பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு என்பவர் மீதும் அவரது மனைவி மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நபர் தனது வியாபார நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிய வேளை வீட்டிற்கு அருகில் மறைந்திருந்த கொள்ளை கும்பல் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு அவரது வியாபார பணத்தினை கொள்ளையடித்துள்ளது.

அதேவேளை, சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்த வர்த்தகரின் மனைவி மீதும் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி அவரது நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்