Paristamil Navigation Paristamil advert login

தலைமன்னாரை உலுக்கிய சந்தேகநபரை தீவிரமாக தேடும் பொலிஸார்

தலைமன்னாரை உலுக்கிய சந்தேகநபரை தீவிரமாக தேடும் பொலிஸார்

1 ஆனி 2024 சனி 16:49 | பார்வைகள் : 1090


சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் 15.02.2024 அன்று தலைமன்னார் பொலிஸ் பிரிவில் 09 வயது சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கந்தையா விஜயன் என்ற அப்துல் ரஹ்மானான இந்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் ஏதேனும் அறிந்தால் 0718591364 அல்லது 0718591370 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்