காஸா, உக்ரேன், ஐரோப்பிய தேர்தல்.. - இன்று ஜனாதிபதி உரை!

6 ஆனி 2024 வியாழன் 09:08 | பார்வைகள் : 14437
இன்று ஜூன் 6, வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார்.
சர்வதேச நிலவரம் குறித்து அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக காஸா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இரஷ்ய-உக்ரேன் யுத்தம், ஐரோப்பிய தேர்தல் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளுக்கு இடையே இந்த உரை Caen (Calvados) நகரில் வைத்து ஒளிபரப்பர உள்ளது. இரவு 8 மணிக்கு இதனைக் காண முடியும்.
இறுதியாக, பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த மூன்று ஐரோப்பிய நாடுகள் (ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே) தங்களது நிலைப்பட்டை உணர்ச்சிகரமில்லாமல் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்த உள்ளதாகவும் அறிய முடிகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1