கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் காட்டு தீ

25 ஆவணி 2023 வெள்ளி 09:46 | பார்வைகள் : 11424
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டு தீ பரவி வருகின்றது.
இந்நிலையில் தீயை அணைக்க விமான படையினர் போராடி வருகின்றனர்.
ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள பர்னிதா மலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 65 வாகனங்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர்களுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
காட்டுத்தீ தலைநகரை தொடர்ந்து மெனிடி நகருக்கும் பரவியுள்ளது. அங்கு 3 முதியோர் இல்லங்களில் இருந்து 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அருகில் குடி இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1