Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து விபத்து - 30 பேர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து விபத்து - 30 பேர் காயம்

19 ஆடி 2024 வெள்ளி 14:11 | பார்வைகள் : 1727


யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

 
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
 
இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகச் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் சூரியன் செய்திகளுக்குத் தெரிவித்தனர். 
 
பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்