Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் தீபத்தை சுமந்த PSG கழக உரிமையாளர் ..!

ஒலிம்பிக் தீபத்தை சுமந்த PSG கழக உரிமையாளர் ..!

22 ஆடி 2024 திங்கள் 18:22 | பார்வைகள் : 2905


PSG கழகத்தின் உரிமையாளர் Nasser Al-Khelaïfi ஒலிம்பிக் தீபத்தை இன்று தாங்கி அணிவகுப்பில் ஈடுபட்டார்.

ஜூலை 22, இன்று திங்கட்கிழமை ஒலிம்பிக் தீபம் Essonne மாவட்டத்தில் உள்ள சில நகரங்களுக்கூடாக கொண்டு செல்லப்பட்டது. Étampes முதல் Évry-Courcouronnes நகரம் வரை இன்றைய தினம் ஒலிம்பிக் தீபம் கொண்டுசெல்லப்பட உள்ளது. நண்பகலின் பின்னர் தீபம் Vigneux-sur-Seine நகருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு வைத்தே, PSG கழகத்தின் உரிமையாளர் Nasser Al-Khelaïfi தனது கைகளில் ஏந்தி சில மீற்றர் தூரம் கொண்டுசென்றார்.

PSG கழகம் சார்பாக ஜூடோ அணி உள்ளிட்ட 26 வீரர்கள் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகிறமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்