Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் மாசடைந்த சென் நதி.. பயிற்சிப்போட்டிகள் இரத்து!

மீண்டும் மாசடைந்த சென் நதி.. பயிற்சிப்போட்டிகள் இரத்து!

28 ஆடி 2024 ஞாயிறு 05:39 | பார்வைகள் : 3378


சென் நதி மாசடைந்துள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருந்த பயிற்சி நீச்சல் விளையாட்டுக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

போட்டிகளுக்கு தயாராக இருந்த சென் நதி மழை காரணமாக மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வின் போது பெய்த மழை பெய்திருந்தமை அறிந்ததே. சென் நதி தற்போது நீந்துவதற்கு உகந்ததல்லாத இடமாக மாறியுள்ள நிலையில், பயிற்சிகளை வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமைக்கு மாற்ற ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்.

triathlon என அழைக்கப்படும் நீண்ட தூரத்துக்கான விளையாட்டு (நீச்சல், மிதிவண்டி அல்லது அஞ்சல் ஓட்டம் போன்றவை) ஏற்பாட்டுக்குழுவான fédération internationale de triathlon மற்றும் ஒலிம்பிக் குழு இணைந்து வெளியிட்ட அறிக்கையில் ’தண்ணீர் ஏற்புடையதாக இல்லை!’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்