Paristamil Navigation Paristamil advert login

நாளொரு நாடகம் நடத்தும் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

நாளொரு நாடகம் நடத்தும் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

29 ஆடி 2024 திங்கள் 02:41 | பார்வைகள் : 581


தமிழகத்தில் தினமும் கொலை நடப்பதால், சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய, காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறிஉள்ளார்.

அவரது அறிக்கை:

சிவகங்கை மாவட்ட பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலர் செல்வகுமார் சமூக விரோதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் கொலைகளின் தலைநகரம் ஆகிவிட்டது.

அரசு குறித்தோ, காவல்துறை குறித்தோ, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை.

சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும், உயிரை பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றி லேயே நிகழ்ந்ததில்லை.

சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற இயலாத கையாலாகாத்தனத்தை தொடரும் முதல்வர் ஸ்டாலின், தனக்கு முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என, சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்