Paristamil Navigation Paristamil advert login

உச்சிமாநாடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் சீனா

உச்சிமாநாடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் சீனா

29 ஆடி 2024 திங்கள் 08:05 | பார்வைகள் : 821


தைவானில் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

அதில் கலந்துகொள்ள வேண்டாம் என 6 நாடுளுக்கு  சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த வாரம் தைவான் தலைநகர் தைபேயில் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல நாடுகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் மீது உரிமைகோரிவரும் சீனா, தைபேயில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பொலிவியா, கொலம்பியா, ஸ்லோவாக்கியா, வடக்கு மாசிடோனியா, போஸ்னியா மற்றும் ஒரு ஆசிய நாடு என ஆறு நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

குறித்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், தைவானுக்கு செல்வதற்கான அவர்களின் திட்டங்களுக்கு முரணான உரைகள், அழைப்புகள் மற்றும் சந்திப்புகளுக்கான அவசர கோரிக்கைகளைப் பெறுவதாகக் கூறுகிறார்கள்.

மேலும், அவர்கள் சீனாவின் இந்த எச்சரிக்கையை சுயராஜ்ய தீவை (தைவான்) தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் என்று விவரிக்கிறார்கள்.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்