Paristamil Navigation Paristamil advert login

39°C வரை வெப்பம்.. அனல் காற்று எச்சரிக்கை!

39°C வரை வெப்பம்.. அனல் காற்று எச்சரிக்கை!

1 ஆவணி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 1603


இன்று ஓகஸ்ட் 1 ஆம் திகதி, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுல் வெப்பமான காலநிலை நிலவும் எனவும், சில மாவட்டங்களில் 39°C எனும் அதிகூடிய வெப்பம் நிலவ வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rhône, Isère, Drôme, Ardèche, Vaucluse, Alpes-de-Haute-Provence, Hérault, Gard, Bouches-du-Rhône, Var, Alpes-Maritimes மற்றும் Corsica ஆகிய 13 மாவட்டங்களுக்கு வெப்பம் மற்றும் அனல்காற்று அனர்த்தங்களுக்காக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் 32°C வரையான வெப்பமும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக  39°C வரையான வெப்பமும் நிலவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்