Paristamil Navigation Paristamil advert login

 இன்று மோதவுள்ள இந்திய - இலங்கை அணி இடையிலான போட்டி மழையால் தடைப்படுமா?

 இன்று மோதவுள்ள இந்திய - இலங்கை அணி இடையிலான போட்டி மழையால் தடைப்படுமா?

2 ஆவணி 2024 வெள்ளி 08:51 | பார்வைகள் : 685


டி20 ஐ 3-0 என்ற கணக்கில் வெற்றிகரமாகக் கைப்பற்றிய இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையை எதிர்கொள்ள இன்று தயாராக உள்ளது.

டி20 ஐ 3-0 என்ற கணக்கில் வெற்றிகரமாகப் பெற்ற பிறகு, இந்தியா கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது.

இதன் முதல் ஆட்டம் இன்று வெள்ளிக்கிமை (02) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் (R. Premadasa Stadium) நடைபெறவிருக்கிறது.

 டி20 உலகக் கோப்பை 2024 வெற்றிக்குப் பிறகு முதல் ஆட்டத்தில் விளையாடும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் வருகை அனைவரையும் ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கிறது.

இது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டியாகும்.


இந்தியாவும் இலங்கையும் இதுவரை 168 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 99 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது,  இலங்கை அணி 57 போட்டிகளில் வென்றுள்ளது. 

இலங்கைக்கு எதிரான கடைசி 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இறுதியாக 2021 ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றிப்பெற்றது. இந்தியா மொத்தம் 225 ரன்கள் எடுத்தது.


D/L முறைப்படி 48 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்பில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இருப்பினும், போட்டி தொடங்கும் முன்பே அது சரியாகி விடும் என கூறப்படுகிறது. மாலையில் மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதால், போட்டி தடைபடும்.

மேலும் இன்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தாலும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் புதிய வீரர்களுக்கும் பழைய வீரர்களுக்கும் பலமாக இருக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் அதிவேக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வலியுறுத்தியுள்ளார்.   

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்