Paristamil Navigation Paristamil advert login

புயல் காரணமாக நிறுத்தப்பட்ட நீச்சல் பயிற்சிகள்..!

புயல் காரணமாக நிறுத்தப்பட்ட நீச்சல் பயிற்சிகள்..!

3 ஆவணி 2024 சனி 05:35 | பார்வைகள் : 1558


மூன்று வெவ்வேறு விதமான விளையாட்டுக்களை இணைக்கும் ட்ரயதலோன் விளையாட்டுக்களுக்கான பயிற்சிகள் இன்று சென் நதியில் திட்டமிடப்பட்டிருந்தன. அவை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பரிசில் கடந்த இரண்டுநாட்களாக நிலவிய மழை மற்றும் மிதமான புயல் காரணமாக சென் நதியில் மாசடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இந்த நீச்சல் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சென் நதி வரும் திங்கட்கிழமை பரிசோதிக்கப்பட்டு, மறுநாள் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை இந்த பயிற்சிப்போட்டிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென் நதியை தூய்மைப்படுத்த இதுவரை 1.4 பில்லியன் யூரோக்கள் தொகையை அரசு மற்றும் 15 வரையான பங்காளர்கள் செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்