Paristamil Navigation Paristamil advert login

யாழில் குளவி கொட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்த பெண்

யாழில் குளவி கொட்டுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்த பெண்

4 ஆடி 2024 வியாழன் 11:53 | பார்வைகள் : 428


யாழ்ப்பாணம் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளவி கொட்டியதையடுத்து, குறித்த பெண் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய குணசேகரம் வரதாசிரோமணி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணியில் பனை ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்த போது குளவி கொட்டியுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்