Paristamil Navigation Paristamil advert login

தெலுங்கானாவும், ஆந்திராவும் எனது இரு கண்கள் : சந்திரபாபு நாயுடு

தெலுங்கானாவும், ஆந்திராவும் எனது இரு கண்கள் : சந்திரபாபு நாயுடு

7 ஆடி 2024 ஞாயிறு 13:08 | பார்வைகள் : 1157


தெலுங்கானாவும் ஆந்திராவும் எனது இரு கண்கள்' என ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறினார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: தெலுங்கானாவில் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தெலுங்கானாவில் எங்களுக்கு ஏராளமான தொண்டர்கள் உள்ளனர். இது தான் தெலுங்கு தேசம் கட்சியின் பலம். ஆந்திரா தேர்தலில் எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உழைத்திருக்கிறீர்கள். நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். தெலுங்கானாவும் ஆந்திராவும் எனது இரு கண்கள். தெலுங்கு தேசம் கட்சி இரு மாநிலங்களும் செழிக்க வாழ்த்துகிறேன். இப்போது தெலுங்கானாவில் ​காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

வெவ்வேறு சித்தாந்தங்கள்
ரேவந்த் ரெட்டி இப்போது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறார். இது தான் தெலுங்கு தேசம் கட்சியின் இலக்கு. இரு மாநிலங்களிலும் உள்ள தெலுங்கு மக்களின் வளர்ச்சியைக் காக்க நான் எப்போதும் தயாராக இருப்பேன். இங்கு காங்கிரஸ் ஆட்சியும், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் உள்ளது. இருவருக்கும் வெவ்வேறு சித்தாந்தங்கள். ஆனால் தெலுங்கு மக்களின் நலன் என்று வரும்போது நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்