Paristamil Navigation Paristamil advert login

ரூ.5 கோடியை வேண்டாம் என மறுத்த ராகுல் டிராவிட் 

ரூ.5 கோடியை வேண்டாம் என மறுத்த ராகுல் டிராவிட் 

10 ஆடி 2024 புதன் 10:25 | பார்வைகள் : 5405


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் தனது பரிசு தொகையை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

ICC போட்டியின் முதல் இறுதிப் போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா, ஹென்ரிச் கிளாசனின் 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்ததன் காரணமாக வெற்றி பெற ஒரு பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது.

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் தனது பரிசு தொகையை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2024 டி 20 உலகக் கோப்பையை வென்றதற்காக மற்ற பயிற்சி ஊழியர்களுடன் ஒப்பிடும்போது BCCI வழங்கிய ரூ. 2.5 கோடி பரிசுத் தொகையை பெறுவதற்கு இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடியும், தலைமை பயிற்சியாளர் டிராவிட் ரூ.5 கோடியும் பரிசுத் தொகையாகத் தரப்பட்ட நிலையில், பேட்டிங் ஜாம்பவான் டிராவிட் ரூ.2.5 கோடி பரிசுத் தொகையை மட்டுமே வாங்க முடிவு செய்துள்ளார்.

“ராகுல் தனது மற்ற உதவி ஊழியர்களுக்கு வழங்கிய தொகையை தனக்கும் வழங்குமாறு விரும்புகிறார். அவரது உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்,” என BCCI வட்டாரம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகப் பரிசுத் தொகையான ரூ.5 கோடி இந்திய அணியின் முக்கிய அணியில் உள்ள 15 வீரர்களுக்கும் டிராவிட்டுக்கும் மட்டுமே வழங்கப்பட்டது.

துணைப் பணியாளர்களுக்கு தலா ரூ.2.5 கோடியும், தேர்வாளர்கள் தலா ரூ.1 கோடியும் பெற்றனர்.

இது போன்றே அவர் கடந்த காலங்களிலும் செய்திருந்தார். 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியை உலகக் கோப்பை வெற்றிக்கு அவர் வழிநடத்திய பிறகு, டிராவிட்டிற்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டது. மற்ற துணைப் பணியாளர்கள் தலா ரூ. 20 லட்சமும் ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 30 லட்சமும் கிடைத்தது.

இதற்கு அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இறுதியில், டிராவிட் உட்பட பயிற்சியாளர் குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட்டின் பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக நேற்று முடிவடையப்பட்டு கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்