Paristamil Navigation Paristamil advert login

ஷங்கரின் அடுத்த பட ஹீரோ யார்?

ஷங்கரின் அடுத்த பட ஹீரோ  யார்?

11 ஆடி 2024 வியாழன் 16:21 | பார்வைகள் : 718


பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் ’இந்தியன் 2’ மற்றும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வந்த நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை அடுத்து ’கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை விரைவில் ஷங்கர் தொடங்க உள்ளார் என்பதும் இதனை அடுத்து அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது தெரிந்தது.

சமீபத்தில் ’இந்தியன் 2’ புரமோஷன் நிகழ்ச்சியில் ஷங்கர் பேசிய போது தன்னுடைய அடுத்த படத்திற்காக மூன்று ஐடியாக்கள் வைத்துள்ளதாகவும், ஒன்று வரலாற்று கதை அம்சம் கொண்டது, இரண்டாவது சயன்ஸ் பிக்சன் கதை மற்றும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் அளித்த பேட்டியில், ‘மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை 3 பாகங்களாக திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். கொரோனா காலத்தில் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை படித்ததாகவும், அந்த நாவல் தனக்கு மிகவும் பிடித்து விட்டதை அடுத்து உடனே திரைக்கதையும் எழுதி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூன்று பாகங்களாக இந்த நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள ஷங்கர், இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் சூர்யா ஒரு திரைப்பட விழாவில் ’வேள்பாரி’ நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறிய நிலையில் ஷங்கர் மற்றும் சூர்யா இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ரசிகர்கள் ’வேள்பாரி’ கேரக்டருக்கு விஜய் சேதுபதி சரியாக இருப்பார் என்று பரிந்துரை செய்து வருகின்றனர். இதற்கு ஷங்கர் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்