Paristamil Navigation Paristamil advert login

■ சீரற்ற காலநிலை.. இல் து பிரான்சின் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

■ சீரற்ற காலநிலை.. இல் து பிரான்சின் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

17 ஆவணி 2024 சனி 20:43 | பார்வைகள் : 2368


சீரற்ற காலநிலை காரணமாக இல் து பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஓகஸ்ட் 17, சனிக்கிழமை இரவு 9 மணி முதல் இல் து பிரான்சின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் எனவும், இதன் காரணமாக தலைநகர் பரிஸ் மற்றும் Seine-et-Marne, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணிக்குள்ளாக 50 தொடக்கம் 80 மில்லி மீற்றர் மழை பதிவாகும் எனவும், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்