Paristamil Navigation Paristamil advert login

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல் - 10 பேர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல் - 10 பேர் பலி

18 ஆவணி 2024 ஞாயிறு 09:02 | பார்வைகள் : 933


தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதகாவும், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இத்தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. தெற்கு லெபனானின் நபாட்டி பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்