பிற்பகலின் பின்னர் 24 மாவட்டங்களில் - சீரற்ற காலநிலை..!

24 ஆவணி 2024 சனி 13:47 | பார்வைகள் : 11388
இன்று ஓகஸ்ட் 24, சனிக்கிழமை பிற்பகலின் பின்னர் நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணியின் பின்னர் வேகமான புயற்காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் எனவும், சில இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பதிவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Ain, Allier, Ariège, Aveyron, Cantal, Côte-d'Or, Doubs, Haute-Garonne, Gers, Jura, Loire, Lot, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Puy-de-Dôme, Hautes-Pyrénées, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Tarn, Tarn-et-Garonne மற்றும் Vosges ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸ் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிய முடிகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025