இலங்கையில் பெண் கொலை - இரு சகோதரர்கள் கைது!

25 ஆவணி 2024 ஞாயிறு 09:40 | பார்வைகள் : 6499
ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை (24) மாலை பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக அந்த நபரும் அவரது சகோதரரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சிரில்டன்வத்தை - மீவனபலான பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கனன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹொரணை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1