Paristamil Navigation Paristamil advert login

யாழில் குடும்பத் தகராறில் தீயூட்டப்பட்ட பெண் வைத்தியசாலையில்

யாழில் குடும்பத் தகராறில் தீயூட்டப்பட்ட பெண் வைத்தியசாலையில்

26 ஆவணி 2024 திங்கள் 16:15 | பார்வைகள் : 1173


குடும்பத் தகராறு காரணத்தினால் தீயூட்டப்பட்ட நிலையில் எரிகாயங்களுடன் 28 வயதான பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பெண்ணின் கணவர் மது போதையில் வீட்டுக்கு வந்தநிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து குறித்த பெண்ணை அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்தநிலையில் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் அச்சுவேலி பொலிஸார் குறித்த பெண்ணின் கணவரை சந்தேகத்தின் அடிப்படையில் தேடிவருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்