Paristamil Navigation Paristamil advert login

இறுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு.. படகுப்பயணத்தை கைவிட்ட அகதிகள்..!

இறுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு.. படகுப்பயணத்தை கைவிட்ட அகதிகள்..!

28 ஆவணி 2024 புதன் 09:47 | பார்வைகள் : 2186


கடந்த வாரத்தில் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு எந்த ஒரு அகதிகளும் படகில் பயணிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓகஸ்ட் 20 ஆம் திகதி புதன்கிழமையில் இருந்து நேற்று முன்தினம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரை எந்த ஒரு படகுகளும் பிரித்தானியாவை நோக்கி பயணிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரங்களில், ஒரே நாளில் 800 வரையான அகதிகள் பயணித்த சம்பவங்கள் எல்லாம் பதிவாகியிருந்தன. அகதிகள் பயணம் அதிகரித்தமையினால் பலத்த பாதுகாப்பு கொண்டுவரப்பட்டிருந்தது. அதை அடுத்தே இந்த ஒருவாரத்தில் பயணிகள் பயணம் முற்றாக தடைப்பட்டுள்ளது.

இவ்வருடட்தில் இதுவரை 11,000 இற்கும் மேற்பட்ட அகதிகள் கடல்மார்க்கமாக பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். கடந்த ஆறரை ஆண்டுகளில் 125,440 அகதிகள் பயணித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்