Paristamil Navigation Paristamil advert login

அறம் தான் வெல்லும்: அடித்து சொல்கிறார் ஜாமினில் வந்த கவிதா

அறம் தான் வெல்லும்: அடித்து சொல்கிறார் ஜாமினில் வந்த கவிதா

29 ஆவணி 2024 வியாழன் 05:01 | பார்வைகள் : 725


நீதியும் அறமும் எப்போதும் வெற்றி பெறும் என்பது வரலாறு என தொண்டர்கள் மத்தியில் பாரத் ராஷ்டிர சமிதியை சேர்ந்த கவிதா பேசினார்.

டில்லி மதுபான ஊழல் வழக்கில், பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு, ஐந்து மாத சிறைவாசத்துக்கு பிறகு, ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் வரவேற்ற தொண்டர்களிடம் கவிதா கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விரைவில் விடுபடுவேன். நீதியும் அறமும் எப்போதும் வெற்றி பெறும் என்பது வரலாறு.


தர்மம்
என்னுடைய விஷயத்திலும், நான் எந்தத் தவறும் செய்யாததால், நியாயமும் தர்மமும் கண்டிப்பாக ஒரு நாள் வெல்லும். தெலுங்கானா மக்களுக்கு நான் சொல்கிறேன், சிறிது காலத்தில் உண்மை வெளிவரும். அந்த நாளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்