Paristamil Navigation Paristamil advert login

வெறுப்புக்கு எதிரான வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவது உறுதி: ராகுல்

வெறுப்புக்கு எதிரான வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவது உறுதி: ராகுல்

2 புரட்டாசி 2024 திங்கள் 04:50 | பார்வைகள் : 625


பா.ஜ., எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவோம்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'வெறுப்பை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரப் படிக்கட்டுகளில் ஏறியவர்கள் நாடு முழுவதும் தொடர்ந்து அச்சத்தின் ஆட்சியை நிறுவி வருகின்றனர். ஒரு கூட்டத்தினர் வெளிப்படையாக வன்முறையைப் பரப்பி, சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுகின்றனர். பா.ஜ., அரசிடம் இருந்து இந்த அயோக்கியர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனால்தான் இதை செய்யும் துணிச்சலை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
மவுனம் ஏன்?
சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடர்வதையும், அரசு மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும்.

இந்தியாவின் வகுப்புவாத ஒற்றுமை மற்றும் இந்திய மக்களின் உரிமைகள் மீதான எந்தவொரு தாக்குதலும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலாகும், அதை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பா.ஜ., எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுப் போரில் வெற்றி பெறுவோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்