Paristamil Navigation Paristamil advert login

நாடுமுழுவதும் மழலைகளின் அழுகுரல், "வாழ்த்துகள்" சொல்கிறது paristamil.com.

நாடுமுழுவதும் மழலைகளின் அழுகுரல்,

2 புரட்டாசி 2024 திங்கள் 07:20 | பார்வைகள் : 2364


பிரான்சில் 2024/2025 ஆண்டுகளுக்கான கல்வியாண்டு இன்று 02/09 ஆரம்பமாகிறது சுமார் 12 மில்லியன் நடுநிலை மற்றும் உயர்நிலைப் வகுப்புகளுக்கான மாணவர்கள் கோடைக்கால விடுமுறையை முடித்துக்கொண்டு, நிச்சயமற்ற அரசியல் சூழலில் கல்லூரிகளுக்கு திரும்புகின்றனர். பிரான்சின் பாரம்பரிய நிகழ்வான கல்வியாண்டு தொடங்கும் பொழுது கல்வி அமைச்சர் அன்றைய தினம் பாடசாலைகளுக்கு விஜயம் செய்யும் முறையை, இன்று ராஜினாமா செய்த கல்வி அமைச்சர் Nicole Belloubet அவர்கள்; Bourg-la-Reine பகுதியில் உள்ள பாடசாலைக்கு விஜயம் செய்து நிறைவேற்றி வைக்கிறார். 

அதேவேளை பெற்ற தாய், தந்தையர், கையில் இருந்து இன்று முதல் தடவையாக கல்வித் தாய், தந்தையரான ஆசிரியர்களின் கைகளுக்கு பல ஆயிரக்கணக்கான மழலையர்கள், மழலையர் பாடசாலைக்கு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி எங்கும் மழலைகளின் அழுகுரல் கேட்கிறது. 

புதிய கல்வி ஆண்டு  ஆரம்பிக்கும் இன்றைய நாளில் பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் திரும்பும் ஒவ்வொரு மாணவரையும் மனம் நிறைய அவர்களுடைய கல்வியில் வெற்றி பெற தமது வாழ்த்துகளை தெரிவிக்கின்றது paristamil. com.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்