Paristamil Navigation Paristamil advert login

மரதன் போட்டிகளிற்கு 10.000 காவற்துறையினர்!!

மரதன் போட்டிகளிற்கு 10.000 காவற்துறையினர்!!

8 ஆவணி 2024 வியாழன் 07:55 | பார்வைகள் : 2402


இந்த வார இறுதியில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் பெண்கள், ஆண்களிற்கான மரதன் போட்டிகளின் பாதுகாப்பிற்காக, 10.000 காவற்துறையினர் பாதுகாப்புக் கடமையில் நாளை முதல் ஈடுபட உள்ளனர்.

சனிக்கிழமை 8:00 மணிக்கு ஆண்களின் மரதன் ஓட்டம் பரிஸ் மாநகரசபையான Hôtel de Ville  இல் ஆரம்பித்து, வேர்செய் கோட்டை (Château de Versailles) உடாகச் சென்று, மீண்டும் பரிசின் இன்வலித் சதுக்கத்தை வந்தடைய உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை 8:00 மணிக்கு பெண்களின் மரதன் ஓட்டம் ஆரம்பமாகும்.

இரண்டு மரதன்களும் 42,195 கிலோமீற்றர்கள் தூரத்தைக் கொண்டவை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்