Paristamil Navigation Paristamil advert login

வக்பு வாரிய திருத்த மசோதா: பார்லி., கூட்டுக்குழு அமைப்பு

வக்பு வாரிய திருத்த மசோதா: பார்லி., கூட்டுக்குழு அமைப்பு

9 ஆவணி 2024 வெள்ளி 11:52 | பார்வைகள் : 569


வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட பார்லி., கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு காரணமாக இம்மசோதா பார்லி கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் லோக்சபா எம்.பி.,க்கள் 21 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள லோக்சபா எம்.பி.,க்கள்

ஜகதாம்பிகா பால்

நிஷிகாந்த் துபே

தேஜஸ்வி சூர்யா

அபர்ஜிதா சாரங்கி

சஞ்சய் ஜெயிஸ்வால்

திலீப் சைகியா

அபிஜித் கங்கோபாத்யாய்

டிகே அருணா

கவுரவ் கோகாய்

இம்ரான் மசூத்

முகமது ஜாவேத்

மவுலானா மொஹிபுல்லா நத்வி

கல்யாண் பானர்ஜி

ஏ.ராசா

ஸ்ரீகிருஷ்ணா

திலேஷ்வர் கமியாத்

அர்விந்த் சாவந்த்

சுரேஷ் கோபிசந்த்

நரேஷ் கண்பத்

அருண் பார்தி

அசாதுதீன் ஓவைசி

இக்குழு, அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரின் முதல்வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்