Paristamil Navigation Paristamil advert login

யாழில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் - வாடிகள் , படகுகளுக்கு தீ வைப்பு

யாழில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் - வாடிகள் , படகுகளுக்கு தீ வைப்பு

14 ஆவணி 2024 புதன் 13:44 | பார்வைகள் : 909


யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது . 

சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்றைய தினம்  இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து , கடற்கரையில் இருந்த மீன் வாடி மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 

அதில் வாடிகள் சில எரிந்த நிலையில் , மூன்று படகுகள் தீக்கிரையாகியுள்ளது. 

படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து , ஊரவர்கள் ஒன்று கூடி , தீயினை அனைத்ததுடன் , சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தனர் 

மோதலில் ஈடுபட்ட  இரு தரப்பினரும் தப்பி சென்றுள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்