பரிஸ் : காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி பயணித்த மகிழுந்து.. நால்வரை மோதி தள்ளியது..!

15 ஆவணி 2024 வியாழன் 10:16 | பார்வைகள் : 10100
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த மகிழுந்து ஒன்று நால்வரை மோதி தள்ளியுள்ளது.
ஓகஸ்ட் 14, நேற்று புதன்கிழமை இச்சம்பவம் பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. பிற்பகல் 2 மணி அளவில் மகிழுந்து ஒன்று குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக பயணித்துள்ளது. அதை அடுத்து குறித்த மகிழுந்தினை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் கட்டுப்பாட்டை மீறி மகிழுந்து தொடர்ந்து பயணித்து, வீதியில் சென்ற நால்வரை மோதி தள்ளியுள்ளது. மிதிவண்டியில் சென்ற ஒருவர், நடந்து சென்ற இருவர் மற்றும் பாதசாரி ஒருவர் என மொத்தம் நால்வரை மோதிவிட்டு தப்பிச் சென்ற நிலையில், சாரதி சில நிமிடங்கள் கழித்து கைது செய்யப்பட்டார்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025