Paristamil Navigation Paristamil advert login

காசாவில் போர் நிறத்தத்தை கொண்டு வர முயற்சி 

காசாவில் போர் நிறத்தத்தை கொண்டு வர முயற்சி 

16 ஆவணி 2024 வெள்ளி 07:21 | பார்வைகள் : 663


இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு காசாவில் போர் நிறத்தத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தும்போதெல்லாம் காசா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்துவை சுட்டிகாட்டு தடைபட்டு வருகிறது.

இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தை முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாட்டின் அதிகாரிகள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்த முடியும் என மத்தியஸ்தர் நாடுகள் நம்புகின்றன.

இந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் பங்கேற்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 31 ஆம் திகதி அமெரிக்க அதிபர் போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை வெளியிட்டார். 

இதை இரண்டு தரப்பிலும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டனர். 

ஆனால், ஹமாஸ் அதில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. 

இஸ்ரேல் தெளிவுப்படுத்துதல் குறித்து பரிந்துரை செய்தது.

இருதரப்பிலும் உருவாக்கப்பட்ட புதிய கோரிக்கைகள் தொடர்பாக பரஸ்பர குற்றம்சாட்டியதால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்