Philippine : மாகாண முதல்வர் வழங்கிய உதவியை ஏற்க மறுத்த குடும்பத்தினர்..!

28 புரட்டாசி 2024 சனி 08:11 | பார்வைகள் : 8090
பரிசில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்த Philippine எனும் பெண்ணின் குடும்பத்தினருக்கு, இல் து பிரான்சின் மாகாண முதல்வர் Valérie Pécresse வழங்கிய உதவித்தொகையை அக்குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்.
Philippine கொலை வழக்கு தொடர்பான வழக்கறிஞர் கட்டணத்தை இல் து பிரான்ஸ் மாகாண சபை ஏற்றுக்கொள்ளும் என Valérie Pécresse உறுதியளித்திருந்தார். இந்நிலையில்,
Philippine இன் குடும்பத்தினருக்கு இணையம் மூலம் நன்கொடை சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த தொகை போதிய அளவு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை Versailles (Yvelines) நகரில் Philippine இன் இறுதிச் சடங்கு இடம்பெற்றிருந்தது. அதில் Valérie Pécresse பங்கேற்றிருந்தார்.