Paristamil Navigation Paristamil advert login

Beyrouth,Tel-Aviv நகரங்களுக்கு சேவையை இரத்துச் செய்த எயார் பிரான்ஸ்!

Beyrouth,Tel-Aviv நகரங்களுக்கு சேவையை இரத்துச் செய்த எயார் பிரான்ஸ்!

1 ஐப்பசி 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 1041


Beyrouth மற்றும் Tel-Aviv நகரங்களுக்கிடையே எயார் பிரான்ஸ் நிறுவனம் விமான சேவைகளை இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 18-19-20-21 ஆகிய நான்கு நாட்களும் இந்த சேவைத்தடையினை இஸ்ரேலின் Tel-Aviv நகருக்கு விதித்திருந்தது. இந்நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் முழு மூச்சாக தாக்குதல் மேற்கொண்டுவரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் நேற்று செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை இந்த தடை நிலவும் எனவும், அதேவேளை, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் (Beyrouth) இருந்து இஸ்ரேலின் Tel Aviv
நகருக்கு இடையே இயக்கப்படும் குறைந்த கட்டண சேவைகளையும் காலவரையின்றி தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்