Paristamil Navigation Paristamil advert login

வெள்ளவத்தை கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

வெள்ளவத்தை கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

3 ஐப்பசி 2024 வியாழன் 12:14 | பார்வைகள் : 218


கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் இன்று (03) பிற்பகல் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் 05 அடி 04 அங்குலம் உயரமுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்