Paristamil Navigation Paristamil advert login

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி பலி

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி பலி

7 ஐப்பசி 2024 திங்கள் 11:38 | பார்வைகள் : 1231


கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டெக்கில் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் பாடசாலை பை ஒன்று காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

CCTV காட்சிகளின் படி, சிறுமி கோபுரத்தின் 29வது மாடியில் இருந்து குதித்துள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் உறுதிப்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் படி இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவர் 18 முதல் 20 வயதுடையவர் என நம்பப்படுகிறது என தெரிவித்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்