Paristamil Navigation Paristamil advert login

கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!

கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!

7 ஐப்பசி 2024 திங்கள் 12:01 | பார்வைகள் : 717


பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது போட்டியாளராக உள்ளே வந்த. சாச்சனாவை பார்த்ததும்,  விஜய் சேதுபதி அவரை தன்னுடைய மகள் போலவே பாவித்து பேசிய நிலையில், உன்னுடைய திறமையை வெளிப்படுத்தி... தைரியமாக விளையாட வேண்டும் என அட்வைஸ் கொடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் இவர் தான் மிகவும் குறைந்த வயதுடைய போட்டியாளராகவும் இருந்தார்.

நேற்றைய தினம் நிகழ்ச்சியின் முடிவில், 24 மணிநேரத்தில் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது உறுதி என, விஜய் சேதுபதி அறிவித்ததை தொடர்ந்து... இன்று அதற்கான நாமினேஷன் பாடலாம் நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் மாறி மாறி... சில பிரபலங்களின் பெயர்களை கூறி வந்தனர். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், பிக்பாஸ் வீட்டை விட்டு சாச்சனா வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நாமினேஷனில் அதிக ஓட்டுக்களை பெற்ற சாச்சனா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் என பிக்பாஸ் கூறிய உடன் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர், சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு... தனக்கு விஜய் சேதுபதி கொடுத்த டம்மி ட்ராஃபியை உடைத்து விட்டு கண்ணீர் விட்டு அழுவது பார்க்கும் போது ரசிகர்கள் மனது உருகி விட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்