Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் செல்ல காத்திருந்த யாழ் இளைஞனின் பரிதாப நிலை

பிரான்ஸ் செல்ல காத்திருந்த யாழ் இளைஞனின் பரிதாப நிலை

8 ஐப்பசி 2024 செவ்வாய் 14:19 | பார்வைகள் : 5712


பிரான்ஸ் அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளான். 

முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த நபரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய போது , இளைஞனிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு தொகையை இன்றைய தினம் மீள கையளிப்பதாகவும் , மிகுதி பணத்தினை மிக விரைவில் மீளளிப்பதாக மன்றில் தெரிவித்துள்ளார். 

அதனை அடுத்து அவரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்