Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவை அச்சுறுத்தும் ஐரோப்பிய ஒன்றிய நாடு - ஒப்பந்தம் ஒன்றை ஏற்க வலியுறுத்தல்

பிரித்தானியாவை அச்சுறுத்தும் ஐரோப்பிய ஒன்றிய நாடு - ஒப்பந்தம் ஒன்றை ஏற்க வலியுறுத்தல்

10 ஐப்பசி 2024 வியாழன் 11:00 | பார்வைகள் : 1019


ஜிப்ரால்டார் பிரச்னை பல ஆண்டுகளாக பிரித்தானியா மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான முக்கிய அரசியல் விவகாரமாக உள்ளது.

ஜிப்ரால்டார் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருப்பது ஸ்பெயினுக்கு பல ஆண்டுகளாக பார்வைக்கு உறுத்தலாகவே உள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர், தற்போது நிலையை மேலும் சிக்கலாக உள்ளது.

ஜிப்ரால்டருக்கான பிரெக்சிட்க்கு பிந்தைய ஒப்பந்தத்தை பிரித்தானியா ஏற்காவிட்டால், கடுமையான எல்லையை அமுல்படுத்துமென ஸ்பெயின் எச்சரித்துள்ளது. ஜிப்ரால்டரில் ஸ்பெயின் படைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசே மாணுவல் ஆல்பாரஸ், ஜிப்ரால்டரை அண்டியுள்ள ஆன்டலூசியாவில் உள்ள அதிகாரிகளையும் செய்தியாளர்களையும் சந்தித்து, பிரெக்சிட்க்கு பிறகு யூரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் எல்லை கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தும் வாரங்களுக்கு முன்பே இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.

பிரித்தானியா மற்றும் யூரோப்பிய ஒன்றியத்துக்கிடையிலான ஒரு முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் ஜிப்ரால்டரை ஷெங்கன் பகுதியின் ஒரு பகுதியாக சேர்ப்பதைக் குறிக்கிறது.

இதனால் நில எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்படும். எனினும், ஜிப்ரால்டரின் விமான நிலையம் மற்றும் துறைமுகம் வழியாக வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக ஸ்பெயின் பாதுகாப்புப் படையினர் இருக்க வேண்டுமென மாட்ரிட் வலியுறுத்தியுள்ளது.

ஆல்பாரஸ், இந்த புதிய எல்லை கட்டுப்பாட்டு முறை ஜிப்ரால்டரின் ஒப்பந்தத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டதல்ல என்றாலும், இரு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

இந்த முறை, பிரித்தானிய குடிமக்கள் உள்ளிட்ட யூரோப்பிய அல்லாத குடிமக்கள் 180 நாட்களில் 90 நாட்கள் மட்டுமே ஸ்பெயினில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். கூடவே, எல்லை காவலர்களிடம் ஏன் தாங்கள் ஸ்பெயினுக்கு வர விரும்புகிறார்கள் என்பதை விளக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

பிரெக்சிட்க்கு பிறகு, ஜிப்ரால்டரின் குடியுரிமை அட்டையைப் பெற்றுள்ளவர்கள் ஸ்பெயினை எளிதாகத் தாண்ட அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், 15,000 ஸ்பானிய தொழிலாளர்களும் தினசரி ஜிப்ரால்டரில் எளிதாக வர்த்தகம் செய்ய முடிந்தது.

“ஜிப்ரால்டரின் மக்களின் சுதந்திரப் போக்குவரத்தை தடை செய்ய வேண்டுமா, அல்லது ஸ்பெயின் வழங்கும் அதிகளவு தன்மையுள்ள ஒப்பந்தத்தை ஏற்க வேண்டுமா என்பதை பிரித்தானியா தான் முடிவு செய்ய வேண்டும்,” என ஆல்பாரஸ் கூறினார்.

ஜிப்ரால்டரின் தலைமை அமைச்சர் ஃபேபியன் பிகார்டோ, “ஜிப்ரால்டரில் ஸ்பானிய படையினரின் பதடைகளுக்கான அனுமதி கிடையாது” என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், யூரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் இல்லாவிட்டால், ஜிப்ரால்டரின் அரசு தங்களது புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரக்கூடும் என்று எச்சரித்துள்ளது. இது நில எல்லையில் திரண்டிருக்கும் தாமதங்களை அதிகரிக்கக்கூடும்.

ஜிப்ரால்டரை பிரித்தானியாவின் சிற்றரசு என்று ஸ்பெயின் கருதுகின்றது. இது ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு முரணானது எனவும் ஸ்பெயின் வாதிடுகிறது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்