Pantin : இளைஞனை தாக்கி - தொலைபேசி பறிப்பு.. இருவர் கைது..!
.jpg)
10 ஐப்பசி 2024 வியாழன் 21:00 | பார்வைகள் : 8058
இளைஞன் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து தொலைபேசியை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Pantin (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
அன்று இரவு 9.30 மணி அளவில் rue Louis Nadot வீதியில் நடந்து சென்ற இளைஞன் ஒருவரை இருவர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவரைத் தாக்கி கீழே விழுத்திவிட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் தொலைபேசியினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். Canal de l'Ourcq ஆற்றங்கரை அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாதசாரிகள் சிலர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். சிலர் காவல்துறையினரை அழைத்துள்ளனர். அதை அடுத்தே தாக்குதலாளிகள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.
16 மற்றும் 18 வயதுடைய இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் Aubervilliers நகரில் உள்ள La Roseraie மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1