Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு- 7 பேர் காயம்

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு- 7 பேர் காயம்

8 புரட்டாசி 2024 ஞாயிறு 07:26 | பார்வைகள் : 5071


அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடுஅமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் லெக்சிங்டனுக்கு தெற்கே கிராமப்புற பகுதியில் உள்ள இன்டர்ஸ்டேட் 75 நெடுஞ்சாலையில் வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

அவர் சரமாரியாக சுட்டதில் 7 பேர் காயம் அடைந்தனர். 

பின்னர் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதையடுத்து சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

துப்பாக்கி சூடு நடத்திய நபர் 32 வயதான ஜோசப் ஏ. கூச் என்பது தெரியவந்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்