Paristamil Navigation Paristamil advert login

நைஜீரியாவில்  சிறைக்கைதிகள் தப்பியோட்டம் 

நைஜீரியாவில்  சிறைக்கைதிகள் தப்பியோட்டம் 

20 புரட்டாசி 2024 வெள்ளி 09:57 | பார்வைகள் : 263


நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அங்குள்ள சிறைகளிலிருந்து 274இற்கும் அதிகமான சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய சீர்திருத்தச் சேவை இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

தப்பியோடியவர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் அந்த நாட்டுக் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கைதிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் நிலவும் மழையுடனான காலநிலையினால் இதுவரை 269 பேர்வரை உயிரிழந்ததுடன், 6 இலட்சத்து 40 ஆயிரம் பேர்வரை காணாமல் போயுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்